கோத்தா இழுத்துச் சென்றதை மறந்துவிட்டீரா? மனோ கேள்வி

கொரா கொராவென உம்மை கோத்தா இழுத்து சென்றதை

மறந்துவிட்டீராவென சரத் பொன்சேகாவிடம் கேள்வி எழுப்பியுள்ளார் மனோகணேசன் .

உலகிலேயே தலை சிறந்த இராணுவ தளபதி என்று சொன்ன வாயாலேயே உம்மை கைது செய்து இழுத்து வர சொன்னார்கள். அக்காலத்தில் "புலி" என குற்றம் சாட்டப்பட்ட என் கண் முன்னாலேயே, புலிகளை கொன்ற உம்மை, ஒரு மிருகத்தை போன்று இழுத்து போனார்கள். மறந்து விட்டதா? நான் அரசியலில் பொடியன் இல்லை. நீண்ட வரலாறு எனக்கு உள்ளது. மறந்து விட்டதா? சூறாவளி தமிழ் பிரதேசத்தில் வீசியிருக்க வேண்டும் என்று கூறும் உம்மீது தமிழ் மக்களும், மக்கள் பிரதிநிதிகளும் என்று கோபமாக இருக்கிறார்கள். தெரியுமா?

என்னை பொறுத்த வரையில் இந்நாட்டில் சூறாவளி, சுனாமி, இனவாதம், அடிப்படைவாதம், மதவாதம் எதுவும் கூடாது என நினைக்கிறேன். நான் தமிழன், இந்து என்பவற்றால் பெருமையடைகிறேன். ஆனால் அவற்றைவிட இலங்கையன் என்பதிலேயே அதிக பெருமையடைகிறேன். நாம் எல்லோரும் அப்படியே சிந்திக்க வேண்டும் எனவும் விரும்புகிறேன்.

புலிகள் இயக்கம் மீது தடை உண்டு. ஆகவே அவர்களின் பெயரை கூறாமல் இருக்கலாம். ஆனால், போரில் இறந்த சாதாரண மக்களையும், ஆயுத போராளிகளையும், நினைவுக்கூர உரிமை உண்டு. அவர்களது குடும்பத்தோருக்கு உரிமை உண்டு. இறந்து போன பிள்ளைகளையும், சகோதரர்களையும், கணவர்களையும் நினைவுகூர உரிமை உண்டு. அதேபோல் புலிகள் இயக்கம் மீதான தடையை நீக்க சொல்லி நீதிமன்றத்துக்கு சென்று வழக்காடவும் உரிமை உண்டு. இது தொடர்பில் சில நாள் முன்பு கஜேந்திரகுமார் எம்பியிடம் சொன்னேன். சுமந்திரன் எம்பியிடமும் சொல்கிறேன். விக்னேஸ்வரன் எம்பியிடமும் சொல்கிறேன். சட்டத்தரணிகளான அவர்கள் செயற்படலாம் என கேள்வி எழுப்பியுள்ளார் மனோகணேசன் .

No comments