அம்பாறையில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் மாவீரர் நாள் நினைவேந்தல்


தென் தமிழீழத்தில், அம்பாறை மாவட்டத்தில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் அங்குள்ள தமிழ்த் தேசிய செயற்பாட்டாளர் ஒருவரின் இல்லத்தின் மாவீரர் நாள் நினைவேந்தல் இடம்பெற்றது. 

கட்சியின் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வராஜா கஜேந்திரன் தலைமையில் குறித்த வீட்டில் மாவீரர்களுக்கு சுடர் ஏற்றி வணக்கம் செலுத்தப்பட்டது. 

இந்த நினைவேந்தலில் தமிழ்த் தேசிய செயற்பாட்டாளர்கள் சிலரும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் உறுப்பினர்கள் சிலரும் பங்கெடுத்தனர். 

சிறிலங்கா படைகளின் முற்றுகைக்கு மத்தியில் தென் தமிழீழத்தில் உள்ள மக்கள் மாவீரர்களுக்கு சுடர் ஏற்றி வணக்கம் செலுத்தினர். 

No comments