சர்ச்சைக்கு தீர்வு:மன்னாரில் ஜனாசாக்கள் அடக்கம்!


கொரோனாவால் மரணிக்கும் முஸ்லிம்களின் ஜனாஸாக்களை,மன்னாரில் ஒரே இடத்தில் நல்லடக்கம் செய்வது தொடர்பிலேயே ஆராயப்பட்டதாக அறியமுடிகின்றது. நல்லடக்கம் செய்வதற்கான வர்த்தமானி அறிவித்தலை வெளியிடுவது பற்றி  அமைச்சரவையில் விரிவாக கலந்துரையாடப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

இதற்கான வர்த்தமான அறிவித்தல் நாளைமறுதினம் (12) நள்ளிரவில்  வெளியிடலாம் எனவும் தெரியவருகிறது.

இதேவேளை,சுகாதார அமைச்சின் தொழில்நுட்பக் குழு, நாளை புதன்கிழமை 11 ஆம் திகதி கூடவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

திருத்தப்பட்ட வர்த்தமானியை வெளியிட (09)  கோட்டாபய தலைமையில் கூடிய அமைச்சரவையில், சுகாதார அமைச்சர் பவித்திரா வன்னியாராட்சி  கொரோனாவால் மரணிக்கும் முஸ்லிம்களின் ஜனாஸாக்களை நல்லடக்கம் செய்யலாமென்ற வர்த்தமானியை வெளியிடப்படும் என்ற  செய்தியை அறிவித்துள்ளாரென அறியமுடிகின்றது. 

அதற்காக மன்னார் மாவட்டத்திலேயே ஒரு இடத்தை தெரிவு செய்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அறியமுடிகின்றது.

No comments