கிழக்கில் 43 பேருக்கு கொரோனா!!


மட்டக்களப்பு கோரளைப்பற்று மத்தி பிரதேச செயலகப்பிரிவிலுள்ள வாழைச்சேனை ஓட்டுமாவடி பிரதேசத்தில் மேலும் 16 பேருக்கு கொரோனா தொற்று உள்ளதாக இன்று செவ்வாய்க்கிழமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளதுடன் இதுவரை 27  கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக  கிழக்கு மாகாண சுகாதார பணிப்பாளர் வைத்தியர் ஏ.லதாகரன் தெரிவித்தார்.

இதற்கமைய  மட்டக்களப்பு ஓட்டுமாவடி பிரதேசத்தில் கடந்த சனிக்கிழமை மேற்கொண்ட பி.சி.ஆர். பிரிசோதனையில் 11 பேருக்கு கொரோனா தொற்றுறுதி கண்டுபிடிக்கப்பட்டு அந்த பிரதேசம் ஊரடங்கு சட்டம் பிற்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில் பேலியகொடை மீன்சந்தையுடன் தொடர்புபட்டவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு அதில் 60 பேருக்கு மேற்கொள்ளப்பட்ட பி.சி ஆர் பரிசோதனையில் மேலும் 16 பேருக்கு கொரோனா தொற்று உள்ளதாக கண்டறியப்படடதையடுத்து கிழக்கில் இதுவரை 43 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.

No comments