கணவன்- மனைவி மின்னல் தாக்கி மரணம்?



அம்பாறை - திருக்கோவில் பிரதேச வினாயகபுரத்தில் இடி மின்னல் தாக்கி கணவனும் மனைவியும் பலியாகியுள்ளனர்.

இந்த சம்பவம் இன்று மாலை 6 மணியளவில் இடம்பெற்றது.

இதில் வினாயகபுரம் தபாலக வீதியைச் சேர்ந்த 46 வயதுடைய லோகநாயகம் யோகேஸ்வரன் மற்றும் அவரது மனைவி 46 வயதுடைய காசிப்பிள்ளை ஜெயசுதா ஆகியோரே பரிதாபகரமாக உயிரிழந்துள்ளனர்.

இவர்களின் சடலம் திருக்கோவில் ஆதார வைத்தியசாலைக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.

குறித்த தம்பதியினர் சாகாமம் கப்பித்தலாவ பகுதியிலுள்ள தமது காணியில் நலக்கடலை செய்கையில் ஈடுபட்டுக்கொண்டிருந்த போது பாரிய இடி மின்னல் ஏற்பட்டது.

அதற்குப் பயந்து ஓடிவருகையில் மின்னல் தாக்கி ஸ்தலத்திலேயே பலியானதாக தெரிவிக்கப்படுகிறது.

No comments