யாழ்.பல்கலை மாணவர் ஒன்றியம் ஆதரவு: நடமாட தடை!



வடகிழக்கில் முன்னெடுக்கப்படவுள்ள கடை அடைப்பிற்கு யாழ்.பல்கலைக்கழக மாணவ ஒன்றியம் தனது முழுமையான ஆதரவை இன்று வெளியிட்டுள்ளது.

இது தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள யாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் தமிழ் தேசியக்கட்சிகளது கூட்டிணைவால் அழைப்பு விடுக்கப்பட்டுள்ள நினைவேந்தலிற்கு யாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றியமும் தனது ஆதரவை தெரிவித்துக்கொள்கின்றது.

நாளைய கடை அடைப்பு போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து மாணவர்கள் எவரும்  கற்றல் செயற்பாடுகளில் பங்கெடுக்கமாட்டார்கள்.

தேவையற்ற சில தரப்புக்கள் மாணவர்களை இலக்கு வைத்து சில சதி நடவடிக்கைகளில் ஈடுபடலாமென தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதனை கருத்தில் கொண்டு மாணவர்கள் வீடுகளிலோ விடுதிகளிலோ தங்கியிருக்க கேட்டுக்கொள்வதுடன் தேவையற்ற நடமாட்டங்களை தவிர்க்கவும் மாணவர் ஒன்றியம் கேட்டுக்கொண்டுள்ளது.


No comments