மக்களை சந்திக்கிறார் கணேஸ் வேலாயுதம்!

 

கடந்த தேர்தல் காலத்தில் தேர்தல் பணிகளில் உதவிய இளைஞர்கள்

மற்றும் சேவை மனப்பான்மையோடு பணிபுரிந்தோரை நாளை (16) தனது காரியலத்தில் சந்தித்து அவர்களுக்கு நன்றி தெரிவிக்க இருப்பதோடு , பகல் போசன விருந்து ஒன்றையும் சிவன் பவுண்டேசன் ஸ்தாபகர் கணேஸ் வேலாயுதம் ஏற்பாடு செய்துள்ளார்.

தேர்தல் காலத்தில் இடம் பெற்ற தவறுகள் மற்றும் பிரச்சனைகளை சிறு கலந்துரையாடலாக நடத்தவிருப்பதோடு எதிர்கால அரசியல் பயணத்துக்கான சில கருத்துகளையும் ஆதரவாளர்களிடமிருந்து பெற உள்ளதாக கணேஸ் வேலாயுதம் தெரிவித்தார்.

விரைவில் தமது கட்சிக்கு ஆதரவு வழங்கிய மக்களை அவர்களது பகுதிகளுக்கு சென்று சந்தித்து அவர்களுக்கு நன்றி தெரிவிக்க இருப்பதாகவும் , தான் இதுவரை பின்பற்றி வந்த சில நடைமுறைகளில் சில மாற்றங்களை கொண்டு வர உள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

கடந்த யாழ் – கிளிநொச்சி மாவட்டத்தில் அவர் போட்டியிட்ட கட்சி 14’542 வாக்குகளை பெற்று தோல்வியடைந்தமை குறிப்பிடத்தக்கது

No comments