வளைகுடாவிலிருந்து இலங்கையர்கள் மீட்பு?

கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் சூழ்நிலையில் வெளிநாடுகளில் சிக்கியிருந்த 494 பேர் நாடு திரும்பியுள்ளனர்.


நேற்று (சனிக்கிழமை) ஒரு குழுவினரும் இன்று அதிகாலை ஒரு குழுவினரும் இவ்வாறு மத்தல மற்றும் கட்டுநாயக்க விமான நிலையங்களை  வந்தடைந்துள்ளனர்.


ஐக்கிய அரபு இராச்சியத்தில் இருந்து 34 பேரும், கட்டாரில் இருந்து 22 பேரும் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர்.


அதேபோன்று ஓமானில் இருந்து 150பேரும்,  ஐக்கிய அரபு இராச்சியத்தில் இருந்து 288பேரும் மத்தள விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர்.


இவ்வாறு வருகை தந்துள்ள அனைவருக்கும் பீ.சி.ஆர்.பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டு தனிமைப்படுத்தல் நிலையங்களுக்கு அனுப்பி வைப்பதற்கான நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக விமான நிலையத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

No comments