விக்கினேஸ்வரனை சந்தித்த மாவை மகன்?

தமிழரசுக் கட்சியிலிருந்து எம்.ஏ.சுமந்திரன் மற்றும் சி.சிறீதரனை களை நீக்க மறுதரப்பு மும்முரமாகியுள்ள நிலையில் தனது சுருதியை குறைத்து சுமந்திரன்

பம்ம தொடங்கியுள்ளார்.

இரா.சம்பந்தன் மற்றும் எம்.ஏ.சுமந்திரன் அற்ற புதிய அரசியல் கூட்டிற்கு முயற்சிகள் ஆரம்பமாகியுள்ளது.

இதன் தொடர்ச்சியாக தமிழரசு தலைவர் மாவை சேனாதிராசாவின் மகன் கலையமுதன் நேரடியாக புதிய நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழ் மக்கள்  தேசிய முன்னணி தலைவருமான சி.வி.விக்கினேஸ்வரனை நேரில் சந்தித்து பேச்சு நடத்தியுள்ளார்.

இதனிடையே கூட்டமைப்பின் தோல்வி தொடர்பில் ஆராய குழு ஒன்றை அமைக்க தமிழரசு தலைமை முடிவு செய்துள்ளது.இதன் தொடர்ச்சியான சூழல் சுமந்திரன் தரப்பிற்கு தலையிடி தரலாமென எதிர்பார்க்கப்படுகின்றது.

இந்நிலையில் தமிழரசின் அரசியல் குழுக் கூட்டம் எதிர்வரும் சனிக்கிழமை திருகோணமலையில் நடைபெறவுள்ளது. கட்சியின் மாவட்ட அலுவலகத்தில் முற்பகல் 11 மணியளவில் இந்தக் கூட்டம் ஆரம்பமாகவுள்ளது.

தமிழரசுக் கட்சியின் அரசியல் குழுத் தலைவர் இரா.சம்பந்தன் தலைமையில் நடைபெறவுள்ள மேற்படி கூட்டத்தில் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா, பொதுச்செயலாளர் கி.துரைராஜசிங்கம், அரசியல் குழுவின் உறுப்பினர்களான எம்.ஏ.சுமந்திரன், சி.சிறிதரன், ப.சத்தியலிங்கம், சி.வி.கே.சிவஞானம் மற்றும் எஸ்.எக்ஸ்.குலநாயகம் ஆகியோர் கலந்துகொள்ளவுள்ளனர்.

இதன்போது தமிழரசுக் கட்சியின் தேசியப் பட்டியல் விவகாரம் உட்பட பல்வேறு விடயங்கள் கலந்துரையாடப்படும் என்று கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா தெரிவித்தார்.


No comments