வேலியே பயிரை மேய்ந்த மற்றுமொரு கதை?


மன்னார் விசேட அதிரடிப்படை முகாமின் புலனாய்வு மற்றும் விசேட நடவடிக்கை பிரிவு பொறுப்பதிகாரியான உப காவல்துறை இன்ஸ்பெக்டர் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.


பாரியளவு போதைப்பொருள் கடத்தல்காரர்களுடனும் குற்றச்செயல்களில் ஈடுபடும் குழுவுடனும் இணைந்து போதைப்பொருட்களைக் கடத்தி விற்பனை செய்து ஆயுதங்களை சேகரித்தமை தொடர்பிலேயே அவர் இவ்வறு கைது செய்யப்பட்டுள்ளதாக தொிவிக்கப்பட்டுள்ளது.


இதுதொடா்பில் காவல்துறை போதைப்பொருள் ஒழிப்புப் பணியகத்தில் கடமையாற்றிய உத்தியோகத்தர்கள் குழுவொன்று குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினரால் கைது செய்யப்பட்டு தடுத்து வைத்து விசாரிக்கப்பட்டு வருகின்றனர்.


அவா்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல்களுக்கு அமையவே காவல்துறை விசேட அதிரடிப்படையின் உப காவல்துறை இன்ஸ்பெக்டர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.


கைது செய்யப்பட்ட 49 வயதான குறித்த சந்தேகநபர் புவக்பிட்டிய வெஹேரகொல்ல பகுதியைச் சேர்ந்தவா் எனவும் பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கட்டளைகளுக்கு அமைய சந்தேகநபரை தடுத்து வைத்து அடுத்த கட்ட விசாரணைகளை முன்னெடுக்கவுள்ளதாகவும் காவல்துறையினா் தொிவித்துள்ளனா்

No comments