சிறீதரனை வெல்ல வைப்பாராம் சங்கரி?


2004 ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலின் போது ஜனநாயகத்தை குழிதோண்டி புதைத்தது இரா.சம்பந்தனும், மாவை சேனாதிராஜாவும் தான் என தமிழர் விடுதலை கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ.ஆனந்தசங்கரி குற்றம் சுமத்தியுள்ளார்.

இன்றையதினம் யாழ் ஊடக அமையத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்ட வீ.ஆனந்தசங்கரி முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன் தான் 75 வாக்களித்ததாக தெரிவித்திருந்த கருத்திற்கு கேள்வி எழுப்பினார்.

சிவஞானம் சிறிதரன் கொஞ்சம் சொல்லிவிட்டார். மிகுதியையும் சொன்னால் நல்லது.இரா.சம்பந்தர் கள்ள வாக்கு போடவில்லையா? மாவை சேனாதிராஜா போடவில்லையா? அவர் சொன்ன அதே தேர்தலில் 2004 ஆம் ஆண்டு மாவை சேனாதிராஜா காலையில் தோற்று மாலையில் நாடாளுமன்ற உறுப்பினராக வரவில்லையா?

அனைத்து விடையங்களையும் சிறிதரன் சொன்னால் நான் போட்டி இல்லாமல் அவரை நாடாளுமன்ற உறுப்பினராக்குவேன். 2004 ஆம் ஆண்டு தடம்புரன்ட ஜனநாயகம் இன்னும் திரும்பி வரவில்லை. அந்த ஜனநாயகத்தை மீட்டெடுத்த பெருமை சிறிதரனை சாரும் நான் அவருக்கு சிலை வைப்பேன் என வீ.ஆனந்த சங்கரி தெரிவித்துள்ளார்.

No comments