சீனாவுக்கு எதிராக சர்வதேச நீதிமன்றத்தை நாடும் உய்குர்கள்

சீனாவின் ஜின்ஜியாங் மாகாணத்தில் லட்சக்கணக்கான உய்குர் இன மக்கள் வாழ்ந்து வருகின்றனர். இஸ்லாமிய மதத்தை பின்பற்றும் இந்த மக்களை சீனர்களின் வாழ்க்கை முறைக்கு 5 ஆண்டுகளுக்குள் மாற்ற சீனா திட்டமிட்டுள்ளது. சீன அரசின் கொள்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் உய்குர் இன மக்கள் அங்குள்ள, வதை முகாம்களில் அடைக்கப்பட்டு சித்திரவதை செய்யப்படுகின்றனர்.

சீனாவில் சிறுபான்மையின முஸ்லிம் வகுப்பினரான உய்குர் முஸ்லிம்கள் சீனாவின் தங்களுக்கு எதிரான அடக்குமுறைகளை எதிர்த்து பன்னாட்டு குற்றவியல் நீதிமன்றத்தை நாடியுள்ளனர். சீன கம்யூனிஸ்ட் கட்சிக்கு எதிரானதான முதல் முறை முயற்சியாகும்.

இது தொடர்பாக நியூயார்க்டைம்ஸ் நாளிதழ் வெளியிட்டுள்ள செய்தியில், இரண்டு உய்குர் முஸ்லிம்கள் செயல்பாட்டுக் குழுவை 2 லண்டன் வழக்கறிஞர்கள் பிரதிநிதித்துவம் செய்கின்றனர்.

இது தொடர்பாக பன்னாட்டு குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த 2 உய்குர் குழுக்கள், கிழக்கு துருக்கிஸ்தான் புலம்பெயர் அரசு, மற்றும் கிழக்கு துருக்கிஸ்தான் தேசிய விழிப்புணர்வு இயக்கம் ஆகிய அமைப்புகள் சீனா மீது வழக்கு தொடர்ந்துள்ளன. 

இது தொடர்பாக கிழக்கு துருக்கிஸ்தான் அமைப்புக் கூறும்போது, ஆக்ரமிக்கப்பட்ட ஷின்ஜியாங், அதாவது கிழக்கு துருக்கிஸ்தான் பகுதிக்குள் தாஜிகிஸ்தான், கம்போடியாவிலிருந்து வரும் உய்குர் முஸ்லிம்களை நாடு கடத்துகின்றனர். சீனாவுக்கு திரும்புகையில் இவர்களை கடும் குற்றச்செயல்களுக்கு ஆட்படுத்துகின்றனர். இவர்களை கொலை செய்கின்றனர், சட்ட விரோத சிறை, சித்ரவதை, கட்டாய பிறப்புக் கட்டுப்பாட்டு அறுவைச் சிகிச்சை, கட்டாயத் திருமணம் என்று சீன கம்யூனிஸ்ட் கட்சி கடும் அராஜகங்களை இவர்கள் மீது ஏவி விடுகிறது, என்று குற்றம்சாட்டியுள்ளது.

இதுதொடர்பாக தங்கள் 80 பக்க புகாரில் சீன அதிபர் ஜி ஜின்பிங் உட்பட 30 சீன அதிகாரிகளைக் குற்றம்சாட்டி உள்ளனர்.

ஆனால் என்று உய்குர் முஸ்லிம்களுக்கான நீதி கிடைக்கும் என்பது தெரியவில்லை, ஏனெனில் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் ரோமானியச் சட்டம் என்ற உடன்படிக்கையில் சீனா கையெழுத்திடவில்லை, இருந்தாலும் உய்குர் முஸ்லிம்களுக்கு புதிய நம்பிக்கை பிறந்துள்ளதாகவே வழக்கறிஞர்கள் தெரிவிக்கின்றனர்.

No comments