வாய் வீச்சு:சிறீதரனிற்கு எதிராக முறைப்பாடு?


2004ம் ஆண்டில் நடைபெற்ற தேர்தலில் 75 கள்ள வாக்குப் போட்டதாக தெரிவித்துள்ள தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரனிற்கு எதிராக யாழ்.மாவட்ட செயலகத்தில் உள்ள தேர்தல்கள் தொடர்பான முறைப்பாட்டு பிரிவில் முறைப்பாடு ஒன்று பதிவு செய்துப்பட்டுள்ளது.
ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் யாழ்.தேர்தல் மாவட்டத்தில் போட்டியிடும் வேட்பாளரும், சட்டத்தரணியுமான செலஸ்ரின் ஸ்ரானிஸ்ஸாஸ் என்பவராலே மேற்படி முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.
கடந்த சில தினங்களுக்கு முன்னார் தனியார் ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியில் தாம் 2004ம் ஆண்டு பொதுத் தேர்தலில் 75 கள்ள வாக்குகள் போட்டதாக கூறியிருந்த கருத்து தொடர்பாகவே இந்த முறைப்பாடு பதிவு செய்யப்பட்டிருக்கின்றது.

No comments