பொய் சொன்னால் விசாரணையாம்?


கொரோனா தொற்று தொடர்பில் போலியானத் தகவல்களை பரப்புவோர் குறித்து முறையான விசாரணைகளை முன்னெடுக்குமாறு, அதிகாரிகளுக்கு அறிவித்துள்ளதாக, அரசாங்கத் தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.


சில தரப்பினரால், இவ்வாறான போலித் தகவல்கள் சமூகத்தில் பரப்பப்படுகின்றமைக் குறித்து, கண்காணிக்கப்பட்டுள்ளதாகவும் திணைக்களம் தெரிவித்துள்ளது.

கந்தக்காடு புனர்வாழ்வு மத்திய நிலையத்தில் கொரோனா நோயாளர்கள் அடையாளம் காணப்பட்ட நிலையில், சமூகத்தில் கொரோனா வைரஸ் பரவமால் இருப்பதற்கு அரசாங்கத்தினால் உரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் அரசாங்க தகவல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் நாலக களுவெவ தெரிவித்துள்ளார்.

No comments