பொய்யென்கிறார் வடக்கு ஆளுநர்?


வடமாகாண ஆளுநர் பதவியிலிருந்து தன்னை விலக்க திட்டமிட்டுள்ளதாக பரப்பப்படுவது பொய்யான செய்திகளேயென வடமாகாண ஆளுநர் திருமதி.எம்.சாள்ஸஸ் தெரிவித்துள்ளார்.

அண்மைய நாட்களாக காழப்;புணர்ச்சி கொண்ட ஒரு தரப்பினரும், சில குடாநாட்டு ஊடகங்களும் இணைந்து என்னைப் பற்றி புனைகதைகளை தொடர்ச்சியாக வெளியிட்டு வருகின்றனர்.அவை எந்தவிதமான அடிப்படையற்ற உண்மைக்குப்புறம்பான கருத்துக்களே என்றும் வடமாகாண ஆளுநர் தெரிவித்துள்ளார்.

ஆளுநர் பதவி ஏற்று சொற்ப நாட்களில் கொரோனா வைரஸ் பரவல் நெருக்கடி ஏற்பட்டுவிட்டது. அச்சந்தர்ப்பத்தினைப் பயன்படுத்தி, என்மீது காழ்ப்புணர்ச்சி கொண்ட குழுவினர் சில ஊடகங்களின் துணையுடன் உண்மைக்கு புறம்பான முறையிலும் எந்தவிதமான அடிப்படைகள் அற்றவகையிலும் கற்பனையில் செய்திகளை புனைந்து அவற்றை பிரசாரம் செய்துகொண்டிருக்கின்றார்கள்.காலமே உரிய பதிலளிக்கும் எனவும் எம்.சாள்ஸ் தெரிவித்துள்ளார்.

No comments