போர் வெற்றி ஒருபுறம்:கொரோனா இன்னொருபுறம்?


போர் வெற்றிக்கொண்டாட்டங்களில் தெற்கு மூழ்கியிருக்க நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான 35 பேர் நேற்று (19) இனங்காணப்பட்டுள்ளனர் என தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.

இவ்வாறு தொற்றாளர்களாக இனங்காணப்பட்ட அனைவரும் கடற்படையைச் சேர்ந்தவர்கள் எனத் தெரிவிக்கப்படுகிறது. 

இதற்கமைய இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1027 ஆக அதிகரித்துள்ளது.
நேற்றைய போர் வெற்றி விழா நிகழ்வில் பங்கெடுத்த படையினர் இருவருக்கு கொரொனா கண்டறியப்பட்டதுடன் ஜனாதிபதி கோத்தபாய பாதுகாப்பு முகக்கவசமின்றி பங்கெடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments