யாழில் சுகாதார தொண்டர்கள் போராட்டம்

வடக்கு மாகாண சுகாதார தொண்டர்களாக கடமையாற்றியவர்கள் இன்றைய தினம் (28) வடக்கு மாகாண சபைக்கு முன்னால் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

நீண்டகாலமாக சுகாதாரத் தொண்டர்களாக கடமையாற்றி அண்மையில் நிரந்தர நியமனத்திற்கான நியமனக் கடிதங்கள் வழங்கப்பட்டும் இன்று வரை கடமை பொறுப்பேற்க விடாது தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக குற்றம்சாட்டியே இந்த போராட்டம் இடம்பெற்றது.

இவ்வாறு வடக்கு மாகாணத்தைச் சேர்ந்த 387 சுகாதார தொண்டர்கள் பாதிக்கப்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

No comments