கச்சதீவிற்கு அனைத்தும் தயாராம்?


மார்ச் 7ஆம் திகதி நடைபெறவுள்ள கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய பெருவிழாவில் 10 ஆயிரத்துக்கும் அதிகமான யாத்திரிகர்கள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது.

மார்ச் மாதம் 6ஆம் திகதி கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி 7ஆம் திகதி பெருந்திருவிழா நடைபெறவுள்ளது.இந்நிலையில் கச்சதீவுக்கு யாத்திரிகர்கள் செல்வதற்கான ஏற்பாடுகள் தொடர்பான கலந்துரையாடல் யாழ். மாவட்டச் செயலகக் கேட்போர் கூடத்தில் இன்று காலை நடைபெற்றது.

இந்தக் கலந்துரையாடலில்; கடற்படை அதிகாரிகள்,இலங்கை இராணுவத்தினர் அரச மற்றும் தனியார் போக்குவரத்து துறைசார்ந்த அதிகாரிகள், இந்திய துணைத் தூதரக அதிகாரிகள் எனப் பலர் கலந்துகொண்டிருந்தனர்.

மார்ச் மாதம் 6 ஆம் திகதி அதிகாலை 6 மணி முதல் இரவு 10 மணிவரை கச்சதீவுக்கு செல்வதற்கான போக்குவரத்து ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. குறிகட்டுவானில் இருந்து கச்சதீவுக்கான படகு சேவைகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

கச்சதீவில் உணவு சுகாதாரம் உள்ளிட்ட பல்வேறு ஏற்பாடுகள் செய்வதற்கான தீர்மானங்களும் எடுக்கப்பட்டுள்ளன.

போக்குவரத்து மற்றும் யாத்திரிகர்கள் தங்குமிட வசதிகள் பாதுகாப்பு உள்ளிட்ட அனைத்து ஏற்பாடுகளும் கடற்படை மற்றும் காவல்துறையினர்; இணைந்து மேற்கொண்டுள்ளனர்.

இம்முறை நடைபெறவுள்ள பெருவிழாவில் இந்தியாவில் இருந்து 3 ஆயிரத்துக்கும் அதிகமாக யாத்திரிகர்களும் இலங்கையில் இருந்து 7 ஆயிரம் யாத்திரிகர்களும் வருகை தருவார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது.

No comments