மணல் விலை குறையும்

மணல் மற்றும் கற்களை கொண்டு செல்வதற்கான அனுமதி இரத்து செய்யப்பட்டு, அனுமதியின்றி மணல், கற்கள் போன்றவற்றை கொண்டு செல்ல முடியும் என அமைச்சரவையால் தீர்மானிக்கப்பட்டுள்ள நிலையில் அந்த தீர்மானத்தை கண்காணிக்க முடிவெடுக்கப்பட்டுள்ளது என்று அமைச்சர் அமைச்சரவை பேச்சாளர் பந்துல குணவர்த்தன தெரிவித்துள்ளார்.

மேலும்,

அந்த அமைச்சரவை தீர்மானத்தின் முடிவுகளை கண்காணிக்கவும், அவதானிக்கவும் குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.

அவற்றின் அடிப்படையில் அமைச்சரவை முடிவை மேலும் முன்னெடுத்துச் செல்லலாமா என்பதை அமைச்சரவை தீர்மானிக்கும்.

எனினும் அமைச்சரவை முடிவின் காரணமாக மண் மற்றும் கற்களின் விலை குறைவடையலாம் - என்றார்.

No comments