மஸ்தான் மீது வாள் வெட்டு; காவலர் காயம்!

வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் கே.கே.மஸ்தான் மீது நேற்று (29) இரவு இனந்தெரியாத நபர்களினால் தாக்குதல் முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்தச் சம்பவத்தில் படுகாயமடைந்த அவரது பாதுகாவலர் வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

வவுனியா - பாவக்குளம் பகுதியில் மஸ்தான் பயணித்தவேளை அப்பகுதியில் நின்ற சிலர் குறித்த வீதியால் செல்ல முடியாது என்று முரண்பட்டுள்ளனர். அத்துடன் வாள்களால் அவரை தாக்க முயற்சித்துள்ளனர்.

இதன்போது பாதுகாவலர்கள் தாக்குதல் முயற்சியை தடுக்க முற்பட்டபோது பிரதான பாதுகாவலர் காயமடைந்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

No comments