அருட்தந்தை மீதான பொலிஸாரின் தாக்குதல் முயற்சிக்கு கண்டனம்

மன்னார் மறைசாட்சியர் இராக்கினி திருத்தலப் பகுதியில் அதன் பரிபாலகரும் பங்குத்தந்தையுமான அருட்தந்தை. அலெக்சாண்டர் சில்வா (பெனோ) அடிகளார் மன்னார் பொலிஸ் நிலையத்தைச் சேர்ந்த பொலிஸ் உத்தியோகத்தரால் தாக்கப்பட்டதும், அவமதித்து நடத்த எத்தனித்ததையும் மன்னார் மறைமாவட்ட பொதுநிலையினர் வன்மையாக கண்டித்துள்ளது.

குறித்த சம்பவம் தொடர்பாக மன்னார் மறைமாவட்டப் பொது நிலையினர் பேரவையின் பொதுச் செயலாளர் எஸ்.சதீஸ் விடுத்த கண்டன அறிக்கையிலேயே இவ்வாறு கண்டம் வெளியிடப்பட்டுளளது.

கத்தோலிக்க பொது மக்களின் மனங்களின் ரணங்களை மேலும் ஆழப்படுத்தாது உரிய நடவடிக்கைகளை விரைந்து எடுக்குமாறு பொறுப்பான அதிகாரிகளை கேட்டு நிற்கின்றோம் என்றும் குறித்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

No comments