யாழில் மிதிவெடி மீட்பு

யாழ்ப்பாணம் சோமசுந்தரம் அவனியூ பகுதியில் உள்ள ரயில் கடவைக்கு அண்மையில் மிதிவெடியொன்று மீட்கப்பட்டுள்ளது.
குறித்த பகுதியில் மிதிவெடியொன்று இருப்பதாக இன்று (செவ்வாய்க்கிழமை)  காலை பொதுமக்களால் வழங்கப்பட்ட தகவல்களுக்கு அமைவாக யாழ்ப்பாணம் பொலிஸார் அதனை மீட்டுள்ளனர்.
இந்த பகுதியில் மிதிவெடி எவ்வாறு வந்ததென்பது இதுவரையில் கண்டறியப்படாத நிலையில், இந்த சம்பவம் தொடர்பாக யாழ்ப்பாணம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

No comments