விமர்சனம் மூலம் ஒற்றுமையற்றவர்களாக மாற வேண்டாம்

ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவை ஆதரிப்பதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு எடுத்த முடிவானது, பல கட்ட பேச்சுவார்த்தைகள் மற்றும் ஆராய்வுகளுக்கு பின்னரே மேற்கொள்ளப்பட்ட தீர்மானம் என்று அமைச்சரவை அந்தஸ்தற்ற அமைச்சர் வேலுசாமி இராதாகிருஸ்ணன் தெரிவித்துள்ளார்.

எனவே தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தீர்மானத்தை விமர்சிப்பது, எங்களுக்கு இடையில் ஒற்றுமை இல்லை என்பதை மீண்டும் ஒரு முறை நாம் பெரும்பான்மை மக்களுக்கு கூறுகின்ற ஒரு செய்தியாக மாறிவிடும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

கூட்டமைப்பின் தீர்மானம் குறித்து ஒரு சில கட்சிகள் அவர்களை விமர்சிப்பது தொடர்பாக ஊடகங்களுக்கு நேற்று (11) இரவு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

No comments