மிலேனியம் ஒப்பந்தம்; எதிர்த்து போராட்டம்

மிலேனியம் சவால்கள் நிறுவனத்துடனான ஒப்பந்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகத்திற்கு முன்பாக போராட்டம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

‘எம்.சி.சி ஒரு புற்றுநோய்’ என்றும் ‘அமெரிக்கா, எங்களை விட்டு விடுங்கள்’ என்றும் பொறிக்கப்பட்ட பதாதைகளை ஏந்தியவாறு இன்று (புதன்கிழமை) இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

அபிவிருத்தி திட்டங்களுக்காக அமெரிக்கா வழங்கும் 480 மில்லியன் டொலர் மானியம் தொடர்பான ஒப்பந்தம் ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னர் கையெழுத்திடப்படும் என்று அரசாங்கம் கூறியதையடுத்து, கடுமையான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.


No comments