யாழ் மாநகரை சுத்தப்படுத்தும் செயற்திட்டம்

பொலிஸாரின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணம் மாநகரை சுத்தப்படும் சிறப்பு செயற்திட்டம் இன்றைய தினம் முன்னெடுக்கப்பட்டது.

யாழ்ப்பாணம் முனியப்பர் கோவில் முன்றலில் காலை 7.30 மணி முதல் குறித்த செயற்திட்டம் முன்னெடுக்கப்பட்டது.

ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்சவின் அறிவுறுத்தலுக்கு அமைய நாடுமுழுவதும் சுற்றுச் சூழலை சுத்தப்படுத்தும் பணியில் பொலிஸ் திணைக்களம் முன்னெடுத்துள்ளது.

யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையம் மற்றும் பிரதேச செயலகம் ஆகியன இணைந்து இந்தச் செயற்திட்டத்தை யாழ்ப்பாணம் மாநகரில் முன்னெடுத்தனர்.

அதில் யாழ்ப்பாணம் மாநகர சபை உறுப்பினர்களும் இணைந்து கொண்டனர்.



No comments