மார்ச்சா ? மேயிலா? தேர்தல் பரபரப்பு!
பாராளுமன்றத் தேர்தல் பெரும்பாலும் அடுத்த ஆண்டு மே மாதம் முதல் வாரத்தில் நடத்தப்படுவதற்கு வாய்ப்புகள் உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
விரைவில் பாராளுமன்றத் தேர்தல் நடத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷ கூறியிருந்தாலும், பாராளுமன்றத்தைக் கலைப்பதற்கான அதிகாரம் மார்ச் முதலாம் திகதிக்குப் பின்னரே அவருக்கு கிடைக்கும்.
இந்த நிலையில், ஜனாதிபதி பாராளுமன்றத் தேர்தல் அறிவிப்பை வெளியிட்ட பின்னர், தேர்தலை நடத்துவதற்கு, தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு குறைந்தது இரண்டு மாதங்கள் தேவைப்படும் என்று ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.
எனவே மார்ச் 2 ஆம் திகதி பாராளுமன்றத் தேர்தலுக்கான அறிவிப்பை ஜனாதிபதி வெளியிட்டாலும், மே மாதம் முதல் வாரத்திலேயே தேர்தல் நடத்தப்படும் வாய்ப்புகள் உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
Post a Comment