69 தேர்தல் வன்முறை:யாழில் ஒன்று!



இலங்கையில் இன்று இடம்பெறுகின்ற ஜனாதிபதித் தேர்தல் வாக்களிப்பில் காலை 7மணி முதல் 10 மணி வரை 69 தேர்தல் வன்முறைகள் நடந்துள்ளது.

யாழ்ப்பாணத்தில் ஒரு முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.சுயேட்சை வேட்பாளரான கே.சிவாஜிலிங்கத்தின் உதவியாளரான தம்பிராசா காரை நகரில் வாக்களிக்க சென்றிருந்த நிலையில் தாக்கப்பட்டுள்ளார்.

இதனிடையே மதியம் வரை வவுனியாவில் 50 விழுக்காடு வாக்களிப்பு இடம்பெற்றுள்ளது.

இதனிடையே ஜனாதிபதியை தெரிந்தெடுக்கும் இத்தேர்தலில் அனைவரும் வாக்களிக்க தவறக்கூடாதென இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,  ஆட்சியை மக்கள் தான தீர்மானிக்கிறார்கள். இந்த நாட்டில் வாழ்வுரிமை வேண்டுமெனில் வாக்குரிமையுள்ள சகல மக்களும் வாக்களித்தே ஆக வேண்டும்.

எக்காரணம் கொண்டும் அந்தக் கடமையிலிருந்து எவரும் பின்வாங்கவே கூடாது எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

No comments