ஈழத்தலைநகர் சம்பூர் ஆலங்குளம் துயிலுமில்லத்தில் நினைவேந்தல்;

திருகோணமலை சம்பூர் ஆலங்குளத்தில் அமைந்துள்ள மாவீரர் துயிலுமில்லத்தில் மாவீரர் நாள் நிகழ்வுகளுக்காக பெருந்திரளான மக்கள் ஒன்று கூடி கொட்டும் மழையினையும் பொருட்படுத்தாது  மாவீரர்களுக்கு  பொதுச்சுடரேற்றி அஞ்சலி செலுத்தினர் .இம்முறை பொதுச்சுடரினை கப்டன் கருணாவின் துணைவியார் க.திருச்செல்வி கப்டன் சமர் வேங்கையின் துணைவியார் ர.நந்தினி ஆகியோர் ஏற்ற அதனைத் தொடர்ந்து 1500நினைவுச் சுடர்கள் ஏற்றப்பட்டு அஞ்சலி செலுத்தப்பட்டது.

No comments