தபால் வாக்களிப்பில் தவறு:மூன்று ஆண்டு சிறை?


தபால் மூல வாக்களிப்பில் சஜித் அலைவீசுவதாக கருத்துக்கள் முன்வைக்கப்படுகின்ற நிலையில் தபால் மூலம் வாக்களித்த புகைப்படத்தை சமூக ஊடகங்களில் வெளியிடும் அரச ஊழியர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என, தேர்தல்கள் ஆணைக்குழுவின் தவிசாளர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.
இன்று (31) இடம்பெற்ற ஊடவியலாளர் சந்திப்பில் அவர் இதனைக் கூறியுள்ளார்.
இவ்வாறான செயலில் ஈடுபடும் அரச ஊழியர்களுக்கு 3 வருட சிறைத்தண்டனை விதிக்கப்படலாம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த ஆண்டு வவுனியாவில் தபால் மூல வாக்களிப்பின் பின்னர் அதனை செல்பி எடுத்து பிரசுரித்த பணியாளர் ஒருவர் கைதாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments