திருடிய நகைகள் தங்கக் கட்டியாக மீட்பு; கொடூரத் திருடர்கள் கைது.
மட்டக்களப்பு- கல்லடியில் வீட்டை உடைத்து திருடப்பட்ட தங்க நகைகள் உருக்கப்பட்ட நிலையில் யாழ்ப்பாணம் சாவகச்சேரி நகைக்கடை ஒன்றிலிருந்து பொலிஸாரால் நேற்றுக் காலை கைப்பற்றப்பட்டுள்ளது என்று காத்தான்குடி பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி கஸ்தூரி ஆராச்சி தெரிவித்தார்.
கடந்த 29.8.2019 அன்று கல்லடி கடற்கரை வீதியிலுள்ள வீடு ஒன்றை உடைத்து 2 மாலைகள், 2 வளையல்கள், ஒரு தங்கச் சங்கிலி மற்றும் மோதிரங்கள் திருடப்பட்டிருந்தன.
இது குறித்து பொலிஸாரால் கைது செய்யப்பட்டிருந்த கல்லடியைச் சேர்ந்த ஒருவர் விசாரணைகளின்போது வழங்கிய தகவல்களின் அடிப்படையில் இந்தச் சம்பவத்துடன் தொடர்புடைய களுவாஞ்சிக்குடி மற்றும் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இருவர் குறித்த தகவல்கள் வெளிவந்தன.
இந்த நிலையில் முதலாவது சந்தேக நபரைக் கைது செய்து தொடர் விசாரணைகளை நடத்திய குற்றத்தடுப்பு பொலிஸ் பொறுப்பதிகாரி முஸ்தபா தலைமையிலான பொலிஸ் குழுவினர் யாழ்ப்பாணம் சென்று பிரதான சந்தேக நபரைக் கைது செய்தனர்.
இதனையடுத்து சாவகச்சேரியிலுள்ள நகைக் கடைகளில் ஒன்றில் குறித்த நகைகள் உருக்கிய தங்கக் கட்டியாக விற்பனை செய்யப்பட்டிருந்த நிலையில் கைப்பற்றப்பட்டன. இதனையடுத்து திருடப்பட்ட நகைகளைக் கொள்வனவு செய்த உரிமையாளரும் களுவாஞ்சிக்குடியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
பிரதான சந்தேக நபர் ஏறாவூர் சவுக்கடியில் உள்ள வீடு ஒன்றை உடைத்துக் கொள்ளையடித்ததுடன் அந்த வீட்டிலிருந்த பெண்ணையும் அவரது மகளையும் கொலை செய்தவர் எனவும் இரண்டாவது சந்தேக நபர் வெல்லாவெளியில் அவரது மனைவியையும் பிள்ளையையும் அவரது மாமியாரையும் கொலை செய்தவர் எனவும் பொலிஸார் தெரிவித்தனர். மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தில் சந்தேக நபர்கள் ஆஜர்படுத்தப்படவுள்ளதாக பொலிசார் மேலும் தெரிவித்தனர்.
கடந்த 29.8.2019 அன்று கல்லடி கடற்கரை வீதியிலுள்ள வீடு ஒன்றை உடைத்து 2 மாலைகள், 2 வளையல்கள், ஒரு தங்கச் சங்கிலி மற்றும் மோதிரங்கள் திருடப்பட்டிருந்தன.
இது குறித்து பொலிஸாரால் கைது செய்யப்பட்டிருந்த கல்லடியைச் சேர்ந்த ஒருவர் விசாரணைகளின்போது வழங்கிய தகவல்களின் அடிப்படையில் இந்தச் சம்பவத்துடன் தொடர்புடைய களுவாஞ்சிக்குடி மற்றும் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இருவர் குறித்த தகவல்கள் வெளிவந்தன.
இந்த நிலையில் முதலாவது சந்தேக நபரைக் கைது செய்து தொடர் விசாரணைகளை நடத்திய குற்றத்தடுப்பு பொலிஸ் பொறுப்பதிகாரி முஸ்தபா தலைமையிலான பொலிஸ் குழுவினர் யாழ்ப்பாணம் சென்று பிரதான சந்தேக நபரைக் கைது செய்தனர்.
இதனையடுத்து சாவகச்சேரியிலுள்ள நகைக் கடைகளில் ஒன்றில் குறித்த நகைகள் உருக்கிய தங்கக் கட்டியாக விற்பனை செய்யப்பட்டிருந்த நிலையில் கைப்பற்றப்பட்டன. இதனையடுத்து திருடப்பட்ட நகைகளைக் கொள்வனவு செய்த உரிமையாளரும் களுவாஞ்சிக்குடியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
பிரதான சந்தேக நபர் ஏறாவூர் சவுக்கடியில் உள்ள வீடு ஒன்றை உடைத்துக் கொள்ளையடித்ததுடன் அந்த வீட்டிலிருந்த பெண்ணையும் அவரது மகளையும் கொலை செய்தவர் எனவும் இரண்டாவது சந்தேக நபர் வெல்லாவெளியில் அவரது மனைவியையும் பிள்ளையையும் அவரது மாமியாரையும் கொலை செய்தவர் எனவும் பொலிஸார் தெரிவித்தனர். மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தில் சந்தேக நபர்கள் ஆஜர்படுத்தப்படவுள்ளதாக பொலிசார் மேலும் தெரிவித்தனர்.
Post a Comment