புலிக் குற்றச்சாட்டில் அப்பாவி எம்பிகள் கைது!

புலிகளுடன் தொடர்புடையதாக எமது கட்சியின் அப்பாவித் தலைவர்கள் இருவர் பாதுகாப்புக் குற்றங்கள் சட்டம் (எஸ்ஒஏ) சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர் என்று மலேசியாவின் ஜனநாயக நடவடிக்கை கட்சியின் பொதுச் செயலாளர் லிம் குவான் எங் குற்றம்சாட்டியுள்ளார்.

புலிகளுடன் தொடர்புடையதாக குறித்த கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருவர் உட்பட ஏழு பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.

மேலும்,

இருவருக்காகவும் சட்டக் குழுவை எமது கட்சி வழங்கும். இருவரும் கட்சியின் அமைதியான தீர்மானம், நிலைப்பாடுகளை ஒருபோதும் மீறவில்லை. இக் கைது அதிர்ச்சியளிக்கிறது - என்றார்.

No comments