வைத்தியசாலையில் தற்கொலைக்கு முயன்ற இளைஞன்

வவுனியா வைத்தியசாலையின் அலுவலக மாடிக்கட்ட தொகுதியின் உச்சியில ஏறி தற்கொலை செய்துகொள்ள முயற்சித்த நபரால் இன்று மாலை வைத்தியசாலையில் பதற்றமான நிலை ஏற்பட்டிருந்தது.

குறித்த நபர் வைத்தியசாலையின் மூன்றாவது மாடிக்கட்டடத்தில் ஏறி கீழே குதிக்க முயற்சிசெய்ததுடன், கையில் வைத்திருந்த கண்ணாடிதுண்டால் தனது கழுத்தையும் அறுத்துள்ளார்.

இந்நிலையில் விரைந்து செயற்பட்ட பொலிசார் மாடிக்கட்டடத்தில் ஏறி குறித்த நபரை வளைத்து பிடித்து வைத்தியசாலையில்  அனுமதித்தனர்.

புதியகற்பகபுரத்தை சேர்ந்த சிறிமோகன் நிதர்சன் வயது 27 என்ற இளைஞரே இவ்வாறு தற்கொலை செய்துகொள்ள முயற்சிசெய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இன்று மதியம் குறித்த நபர் மற்றும் பெண் ஒருவரிற்கும் இடையில் ஏற்பட்ட தகராறு காரணமாக குறித்த பெண் தீயில் எரிந்து தற்கொலை செய்ய முயற்சி செய்த நிலையில் காயமடைந்து, வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கபட்டிருந்ததுடன், குறித்த இளைஞரும் தலையில் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கபட்டிருந்த நிலையிலேயே இந்தச் சம்பவம் நடைபெற்றது.

No comments