அருவக்காலு குப்பை மேட்டில் வெடிப்பு; காரணம் என்ன?

புத்தளம் அருவக்காலு குப்பை சேகரிக்கும் பிரிவு பகுதியில் பாரிய வெடிப்பு இடம்பெற்றுள்ளது. நேற்று இரவு 9 மணியளவில் பாரிய சத்தத்துடன் வெடிப்பு இடம்பெற்றுள்ளதாக கரைத்தீவு மற்றும் சேராக்குளி மக்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த வெடிப்பு சம்பவத்தால் அருவக்காடு குப்பைத் திட்டப் பிரிவை அண்மித்த கரைத்தீவு மற்றும் சேராக்குளி ஆகிய கிராமங்களில் கடுமையான நில அதிர்வு ஏற்பட்டதாகவும் பிரதேச மக்கள் குறிப்பிட்டனர்.

அருவக்காடு குப்பைத் திட்டத்தில் முதன் முதலாக மீதென் வாயுவை எடுப்பதற்கான சோதனை நடவடிக்கைகள் நேற்று முன்னெடுக்கப்பட்டது.

இந்நிலையில் அங்கிருக்கும் குழாய் ஒன்றில் ஏற்பட்ட திடீர் கசிவு காரணமாக இந்த வெடிப்பு இடம்பெற்றுள்ளதாக அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

இதனால் குறித்த பகுதியில் பணிபுரிந்த அனைத்து ஊழியர்களும் மிகவும் பாதுகாப்பாக அவ்விடத்தை விட்டு வெளியேற்றப்பட்டதாகவும் அதிகாரி கூறியுள்ளார்.

No comments