கோடி பெறுமதியான சங்குகளுடன் இருவர் கைது!

அம்பாறை- மாளிகைக்காடு பிரதான வீதியில் அமைந்துள்ள சிகை அலங்கார நிலையத்தில், வலம்புரி சங்கு உட்பட 5 கௌரி சங்குகளை தம்வசம் வைத்திருந்த இருவரை கல்முனை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

மாளிகைக்காடு பகுதியைச் சேர்ந்த  ஆதம்பாவா (வயது-52),  கந்தவனம் ஜீவரத்னம் (வயது-43) ஆகியோரையே நேற்று (10) பொலிஸார் கைது செய்துள்ளனர்.

மேலும் சந்தேகநபர்களிடமிருந்து,  போலி நாணயத்தாள்களை கண்டறியும் கருவி மற்றும் 625 கிராம் வலம்புரி சங்கு, 1.235 கிராம், 1.505 கிராம், 675 கிராம் 515 கிராம், 1.190 கிராம் உள்ளிட்ட கோடிக்கணக்கான சங்குகளையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

No comments