14வது நாளாகத் தொடரும் நீதிக்கான நடைபயணம்!

தமிழினப் படுகொலைக்கு நீதிகேட்டு  ஜெனீவாவில் அமைந்துள்ள ஐ.நா நோக்கி நீதிக்கான நடை பயணம் இன்று 14வது நாளாகத் தொடர்ந்தவண்ணம் உள்ளது.

இன்றைய நடைப்போராட்டம் 360 கிலோ மீற்றர் தூரத்தைத் தாண்டி நகர்ந்துகொண்டிருக்கிறது. குறித்த நடைபோராட்டம் எதிர்வரும் 16ஆம் நாள் ஜெனீவா மனித உரிமைகள் ஆணையகத்திற்கு முன்பாக நிறைவடையவுள்ளது. நிறைவில் ஐ.நா மனித உரிமைகள் ஆணையகத்தில் போராட்டம் குறித்த மனு ஒன்றும் கையளிக்கப்படவுள்ளது.

நடைபோராட்டத்தை பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த திரு.கஜன், திரு.ரஞ்சன் மற்றும் பிரித்தானியா நாட்டைச் சேர்ந்த திரு.உதயணன் ஆகியோர் முன்னெடுத்து வருகின்றனர்.




No comments