சஜித் - அகில ஜனாதிபதி ஆணைக்குழுவில் ஆஜர்


நிறுவனங்களில் இடம்பெற்ற ஊழல் தொடர்பில் விசாரணை செய்வதற்காக நியமிக்கப்பட்ட ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு முன்னிலையில் இரண்டு அமைச்சர்கள் நாளை மறுநாள் (23) ஆஜராகவுள்ளனர்.

சஜித் பிரேமதாஸ மற்றும் அகில விராஜ் காரியவசம் ஆகியவர்களே இவ்வாறு ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு முன்னிலையில் ஆஜராகவுள்ளனர்.

இதற்கு மேலதிகமாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் டீ.எம் சுவாமிநாதனும் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு முன்னிலையில் ஆஜராகவுள்ளார்.

பாடசாலை புத்தகங்களை அச்சிடும் போது அமைச்சரின் புகைப்படத்தை அதில் உள்ளடக்கியதின் ஊடாக இடம்பெற்ற மோசடி தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காகவே அவர் இவ்வாறு ஆஜராகவுள்ளார்.

No comments