டக்ளஸின் கள்ள மண் வியாபாரத்திற்கு அங்கீகாரம்?
வடமராட்சி கிழக்கில் மணல் கொள்ளையிலீடுபட்டு அதனை வனாந்தரமாக்கிய டக்ளஸ் பூநகரி கௌதாரிமுனையில் 5 ஏக்கர் மணல் காணியை 50 இலட்சத்திற்கு வாங்கியுள்ளார்.
ஏற்கனவே பூநகரியிலிருந்து மணல் கொள்ளையில் டக்ளஸ் படை அதிகாரிகள் மற்றும் இலங்கை காவல்துறை சகிதம் குதித்துள்ளதாக செய்திகள் வெளியாகியிருந்தது.
இந்நிலையில் தற்போது பூநகரி கௌதாரிமுனையில் 5 ஏக்கர் மணல் காணியை பொதுமகன் ஒருவரிடமிருந்து கொள்வனவு செய்துள்ளதன் மூலம் தனது மணல் வியாபாரத்தை சட்டரீதியாக முன்னெடுக்க டக்ளஸ் முற்பட்டுள்ளமை அம்பலமாகியுள்ளது.
இதனிடையே கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரனும் பினாமிகளை முன்னிறுத்தி மணல் வியாபாரத்தில் ஈடுபட முற்பட்டுள்ளதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளது.
Post a Comment