இளைஞர்கள் சுவரொட்டி ஒட்ட மட்டும் தானா? - கொந்தளித்தார் தேசப்பிரிய

அரசியல் கட்சிகள் இளைஞர்களை சுவரொட்டிக் ஒட்ட மட்டுமா பயன்படுத்துகின்றன என்று தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய கேள்வி எழுப்பியுள்ளார்.

18 வயதிற்கும் மேற்பட்ட அனைத்து இளைஞர்களுக்கும் வாக்காளர் உரிமை வழங்கக் கோரி ஸ்ரீ ஜெயவர்த்தனபுர மாவத்தையில் உள்ள தேர்தல்கள் செயலகம் முன்னால் நேற்று (12) காலை போராட்டத்தில் ஈடுபட்ட இளைஞர்களுடன் கலந்துரையாடிய போதே அவர் இவ்வாறு கேள்வி எழுப்பினார்.

மேலும்,

இலங்கையில் பதிவு செய்யப்பட்ட வாக்காளர்களில் 40 வீதமானவர்கள் 35 வயதிற்குட்பட்டவர்கள். இம்மக்கள் தொகையில் இருந்து எத்தனை பாராளுமன்ற உறுப்பினர்கள் வந்திருப்பார்கள்?.

எமது அரசியல் கட்சிகள் ஏன்? அதிகமான இளைஞர் வேட்பாளர்களை தெரிவு செய்வதில்லை. இளைஞர்களை சுவரொட்டிகளை ஒட்டுவதற்கு மட்டுமா? பயன்படுத்துகின்றனர். என்றும் கேள்வி எழுப்பியிருந்தார். (பி)

No comments