மாற்றத்தை ஏற்படுத்தக் கூடியவர் கோத்தாவே - சுசில்

நாட்டில் உள்ள சகல பிரஜைகளும் எந்தவித சந்தேகமும் இன்றி மாற்றம் ஒன்றை விரும்புவதாகவும் அந்த மாற்றத்தை ஏற்படுத்த கூடியவர் கோட்டாபய ராஜபக்ஷ எனவும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். 

ஹொக்காந்தர பகுதியில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் உரையாற்றிய போதே அவர் இதனை கூறினார். 

தொடர்ந்தும் உரையாற்றிய அவர், சகல பிரஜைகளும் கட்சி வேறுபாடின்றி மாற்றம் ஒன்றை எதிர்பார்ப்பதாகவும், தற்போது ஐக்கிய தேசியக் கட்சிக்குள் இரண்டு குழுக்கள் உருவாகியுள்ளதாகவும் கூறினார். 

நாட்டில் உள்ள நான்கு மக்கள் வர்கத்தினரும், நாட்டில் உள்ள கீழ்மட்ட மக்கள் பிரிவில் உள்ளவர்களில் இருந்து மேல் மட்டத்தில் உள்ளவர்கள் வரை அந்த மாற்றத்தை எதிர்பார்பதாகவும் கூறினார். 

No comments