சிவரூபன் விவகாரம்:வேட்டையாடப்படும் போராட்டகாரர்கள்?


கைது செய்யப்பட்டுள்ள வைத்தியர் சின்னையா சிவரூபனின் விடுதலைக்காக குரல் கொடுத்துவரும் தரப்பு;ககளை முடக்க இலங்கை அரசு மும்முரமாகியுள்ளது.இதன் பிரகாரம் வைத்தியரது விடுதலைக்காக முன்னின்று செயற்பட்டுவந்த முன்னாள் போராளியொருவர் கைதாகியுள்ளார்.வைத்தியர் சின்னையா சிவரூபனின் விடுதலைக்காக நடத்தப்பட்ட ஆர்ப்பாட்ட போராட்டங்களில் முன்னின்று செயற்பட்ட பளை பகுதியை சேர்ந்த முன்னாள் போராளியே நேற்று கைதாகியுள்ளார்.

நாளை வைத்தியரது விடுதலையினை வலியுறுத்தி கடை அடைப்பு போராட்டத்திற்கு பளை மக்கள் தயராகி வருகின்ற நிலையிலேயே ஆயுதங்கள் மீட்கப்பட்டதான செய்தியை கசிய விட்டுள்ள காவல்துறை பளையினை சேர்ந்த இருவரை கைது செய்துமுள்ளது.

இதனிடையே கைதான இருவரும் புனர்வாழ்வளிக்கப்பட்டு விடுவிக்கப்பட்ட முன்னாள் போராளிகள் என்பது குறிப்பிடத்தக்கது. 

No comments