வாள் வெட்டு குழுக்களை தேடி தேடுதல் வேட்டை


யாழ்ப்­பா­ணத்­தில் புதி­தாக வாள்­வெட்­டுக் குழு ஒன்று உரு­வா­கி­யுள்­ளது என்­றும் அந்­தக் குழு­வி­ன­ரைப் பிடிப்­ப­தற்கு சிறப்பு அதி­ர­டிப் படை­யி­னர் மற்­றும் பொலி­ஸார் இணைந்து தேடு­த­லில் ஈடு­பட்­டுள்­ள­னர் எனவும் தெரி­விக்­கப்­பட்­டது.

யாழ்ப்­பா­ணத்­தில் அண்­மைக்­கா­ல­மாக வாள்­வெட்­டுக் குழுக்­க­ளின் அட்­டா­கா­சம் தொடர்ந்­த­வாறு காணப்­ப­டு­கின்­றது. யாழ்ப்­பா­ணம் பாசை­யூ­ரைத் தள­மா­கக்­கொண்டு தற்­போது ஒரு வாள்­வெட்­டுக் குழு உரு­வா­கி­யுள்­ளது.

யாழ்ப்­பா­ணம் கொழும்­புத்­து­றைச் சந்­தி­யில் நேற்­று­ முன்­தி­னம் குரு­ந­கர் பகு­தி­யைச் சேர்ந்த இரு இளை­ஞர்­கள் மீது வாள்­வெட்டு மேற்­கொள்­ளப்­பட்­டுள்­ளது.

இந்நிலையில் இந்த தேடுதல்கள் ஆரம்பிக்கப்பட்டதாக தெரிகிறது.

No comments