கனவுகள் மெய்யாவதே நியாயம்!



தமிழ் தேசியத்தை நேசித்தமைக்காக கொல்லப்பட்ட ஊடகவியலாளர்கள் எதற்காக கொல்லப்பட்டனரோ அவர்களது கடமைகளை முன்னெடுப்பதே வரலாற்றுக்கடமையென யாழ்.ஊடக அமையம் அறிவித்துள்ளது.
அதனை முன்னெடுத்து செல்ல தமிழ் ஊடகவியலாளர்களை அணிதிரள அது அழைப்பும் விடுத்துள்ளது.
ஆயுததாரிகளால் சுட்டுப் படுகொலை செய்யப்பட்ட நண்பன் ஊடகவியலாளர் சகாதேவன் நிலக்சனின் 12ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் இன்று (01.08 2019) வியாழக்கிழமை நடைபெற்றது.

யாழ்.நீதிமன்ற கட்டட தொகுதிக்கு அருகில் உள்ள படுகொலை செய்யப்பட்ட ஊடகவியாளர்கள் நினைவு தூபியில் நினைவேந்தல் நிகழ்வுகள் நடைபெற்ற நினைவு தூபிக்கு மலர் மாலை அணியப்பட்டு, மலரஞ்சலி செலுத்தப்பட்டது.

யாழ்.பல்கலை கழக ஊடக வளங்கள் பயிற்சி மையத்தின் ஊடக கற்கை மாணவனும், சாரளம் சஞ்சிகையின் ஆசிரியரும், யாழ்,மாணவர் பேரவையின் முன்னாள் தலைவருமான சகாதேவன் நிலக்சன் 2007ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 01ஆம் திகதி அவரது வீட்டில் இருந்த வேளை , அவரது வீட்டிற்கு அதிகாலை 5 மணியளவில் சென்ற ஆயுதாரிகள் நிலக்சனை அழைத்து அவரது பெற்றோர்கள் முன்னிலையில் சுட்டுப்படுகொலை செய்தனர்.

No comments