மட்டக்களப்பில் போராட்டத்தில் சுகாதாரப் பணியாளர்கள்!

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சுகாதாரப் பணியாளர்கள் கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இன்று புதன்கிழமை (31.07.2009) நண்பகல் வைத்தியசாலைக்கு முன்பாக ஒன்றுகூடிய சுகாதாரப் பணியாளர்கள் 12 கோரிக்கைகளை முன்வைத்து  பிற்பகல் 13.00 மணிவரை போராட்டத்தை முன்னெடுத்தனர்.

உயர்வை துரிதப்படுத்தல், தொண்டர்களாக வேலை செய்தவர்களை  நிரந்தரமாக்குதல், சீருடைக்கான கொடுப்பனவை 15 ஆயிரம் ரூபாவாக அதிகரித்தல், ஒரு வாரத்தில் வேலை நாட்களை ஐந்து நாட்களாக ஆக்ககுதல், வாரத்துக்கு 40 மணித்தியாலயங்களுக்குமேல் கடமைபுரியும் அனைத்து மணித்தியாலயங்களுக்கும் மேலதிக கொடுப்பனவு வழங்குதல்.

போன்ற கோரிக்களை முன்வைத்தே போராட்டத்தினை நடத்தினர்.




No comments