மானிப்பாயில் வீதிஓரம் நின்ற இளைஞன் மீது பொலிசார் தாக்குதல்

யாழ்.மானிப்பாய் பகுதியில் வீதியில் நின்ற இளைஞன் மீது போக்குவரத்து பொலிஸாா் தாக்குதல் நடத்தியதுடன், முறைப்பாடு கொடுக்க சென்றபோது அங்கும் இளைஞன் அச்சுறுத்தப்பட்டுள்ளாா்.

மானிப்பாயைச் சேர்ந்த 23 வயதான இளைஞன் மீதே பொலிஸார் தாக்குதல் மேற்கொண்டுள்ளனர். தாக்குதலுக்கு இலக்கான இளைஞன் வைத்தியசாலையில் சிகிச்சைக்கான அனுமதிக்கப்பட்டுள்ளார்.

வேலை முடித்து வீடு திரும்பிய இளைஞன் வீதியில் நின்று தொலைபேசியில் உரையாடிக் கொண்டிருந்த போது, வீதியால் வந்த போக்குவரத்து பொலிஸார் மூவர் இளைஞனை தாக்கியுள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பில் மானிப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்ய இளைஞன் சென்றுள்ளார். எனினும் பொலிஸ் நிலையத்தில் வைத்து

குறித்த இளைஞனுக்கு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

No comments