பிக்குவிற்கு மென்ரல்:காப்பாற்ற காவல்துறை நாடகம்?


நீராவியடிப்பிள்ளையார் ஆலய நந்திக்கொடிகளை பிடுங்கியெறிந்தமை தொடர்பான வழக்கிலிருந்து சர்ச்சைக்குரிய பிக்குவை காப்பாற்ற அவருக்கு மனநிலை பாதிப்பு எனும் புதிய கதையினை இலங்கை காவல்துறை அவிழ்த்துவிடுத்துள்ளது.
குறித்த பிள்ளையார் ஆலயத்தில் பறக்கவிடப்பட்டிருந்த நந்திக்கொடிகள் பிக்குவால் நேரடியாக பிடுங்கி எறியப்பட்டமை தொடர்பில் செய்யப்பட்ட முறைப்பாட்டை முடக்கவே இத்தகைய நடவடிக்கையில் காவல்துறை குதித்திருப்பதாக தெரியவருகின்றது.
இதனிடையே  நீராவியடிப் பிள்ளையார் ஆலயத்தை அபகரித்து குடிகொண்டுள்ள பௌத்த பிக்கு மனநோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக முல்லைத்தீவு பொலிசாரால் தெரிவிக்கப்பட்டதாக தேசிய ஒருமைபாடு, இந்துசமய அலுவல்கள் அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
முல்லைத்தீவு மாவட்டத்தின் பழைய செம்மலை  நீராவியடிப் பிள்ளையார் ஆலயத்தின் ஆலய வளாகத்தை சுவீகரித்து அங்கு பாரிய புத்தர் சிலை ஒன்றை நிறுவி அங்கு பௌத்த விகாரையை அமைத்து குடிகொண்டிருக்கும் கொலம்ப மேதாலங்க தேரர் தற்போது மன நோயால் பாதிக்கப்பட்டுள்ளார் என தகவல் வெளியிடப்பட்டுள்ளது
குறித்த தகவலை மனோ கணேசன் தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார் இது தொடர்பில் அவர் கூறியதாவது
கடந்த வாரம் முல்லைத்தீவு நீராவியடிப் பிள்ளையார் ஆலய அறங்காவலர்கள் என்னை சந்தித்தார்கள் அங்கே முகாமிட்டு இருக்கும் பௌத்த தேரருக்கு எதிராக அறங்காவலர்கள்  அளித்துள்ள புகாரை பொலிசார் விசாரிக்க வில்லை என்று கூறினார்கள்.
தொலைபேசியில் முல்லைத்தீவு பொலிஸ் பொறுப்பதிகாரியிடம் 'ஏன் பிக்குவை கண்டு விசாரித்து வாக்குமூலம் எடுக்கவில்லை' என கேட்டேன்
அதன்போது 'இல்லை ஐயா பிக்குவுக்கு மனநிலை சரியில்லை இப்போது அவர் கொழும்பில் மனநல சிகிச்சை பெற்று வருகிறார்'; என்று எனக்கு பொறுப்பதிகாரி பதில் கூறினார் எனவும் அந்த முகநூல் பக்கத்தில் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

No comments