மோடியிடம் செல்கின்றார் மைத்திரி!


அமெரிக்க மற்றும் இந்தியாவுடனான பாதுகாப்பு ஒப்பந்தத்தை நிராகரித்த மைத்திரி சீனா தரப்பு நிலைப்பாட்டை எடுத்துள்ளதான குற்றச்சாட்டுக்கள் மத்தியில் இந்தியா செல்கின்றார்.
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் பதவியேற்பு விழாவில் கலந்துக்கொள்வதற்காக, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று காலை இந்தியா பயணமாகியுள்ளார்.
இன்று காலை 8.20 மணியளவில் இந்திய விமான நிறுவனத்துக்குச் சொந்தமான ஏ.ஐ.282  விமானத்தில் டில்லி நோக்கி பயணமாகியுள்ளார்.
ஜனாதிபதியுடன் மேலும் 12 பேர் டில்லி சென்றுள்ளமைக் குறிப்பிடத்தக்கது.

No comments