முள்ளிவாய்கால் பேரவலம் 10ஆம் ஆண்டின் இரண்டாம் நாள் போராட்டம்

இன்று 12.05.19 - 2வது நாளாக 10 Downing street ல், எமது மக்களால் அடையாள உண்ணாவிரதப் போராட்டம் ஆரம்பமானது. ஈகைச் சுடரை திரு. பாலகிருஷ்ணன் அவர்கள் ஏற்றி வைத்தார். அகவணக்கத்தைத் தொடர்ந்து மலர் வணக்கமும் செலுத்தப்பட்டது.

இந்த வரலாற்றுக் கடமையில், அனைத்துத் தமிழ் மக்களும் அணியணியாகத் திரண்டு வந்து, எமது இனத்திற்கு இழைக்கப்பட்ட அநீதியை உலகத்திற்கு எடுத்துச் சொல்லி, அதற்கான நீதியை வேண்டி நிற்போம்.

இன்று அடையாள உண்ணாவிரதம் இருக்கும் உறவுகளான
சுயீவன், ஈசன், தனு, டெனிஸ்வினி, சுரேகா, சசிமிலானி, லோகவிந்தன், அகிலன், நிசாந்தன், அரவிந்தன், தயாகரன், கோகிலன், லோகநாதன், கோபிகா, குகநேந்திரன், பிரபா, குயிபாலன், சகாயராஜ், பாலகிருஷ்ணன், ஜீவதர்சினி, வித்யா, அன்ரனி லெவின்டர், லக்சன் ஆவார்கள்.

May 18 2019 அன்று எமது தேசிய உணர்வை வெளிப்படுத்துவோம் @ 2 pm, Green park station இருந்து parliament square வரை பேரணி நடைபெறும், அத்தோடு parliament squareல் எழுச்சி ஒன்று கூடல் நடைபெறும்.

No comments