இன்றும் நாடு தழுவிய ரீதியில் ஊரடங்கு!

இன்றும் நாடு தழுவிய ரீதியில்  இரவு 9.00 மணிமுதல் நாளை அதிகாலை 4.00 மணி வரை ஊரடங்குச் சட்டம் அமுலில் இருக்கும் என காவல்துறை அறிவித்துள்ளது.

கம்பஹா காவல்துறை பிரிவிற்குட்பட்ட பகுதிகளில் இன்று இரவு 7.00 மணி முதல் நாளை காலை 6.00 மணி வரை ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட திட்டமிடப்பட்டுள்ளது.

வடமேல் மாகாணத்தில் அமுல்பபடுத்தப்பட்டிருந்த காவற்துறை ஊரடங்கு சட்டம் இன்று மாலை 4.00 மணி முதல் 6.00 மணி வரை 2 மணித்தியாலங்கள் தளர்த்தபடும்.

மீண்டும் இன்று மாலை 6.00 மணிமுதல் நாளை காலை 6.00 மணி வரை வடமேல் மாகாணத்தில்  ஊரடங்கு சட்டம் மீண்டும் அமுல்படுத்தப்படவுள்ளது.

No comments