தனக்குத் தானே தீ மூட்டியவர் உயிரிழப்பு!

தனக்கு தானே தீ மூட்டி தற்கொலைக்கு முயற்சி செய்வர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிற்சைகள் பலனின்றி உயிரிழந்துள்ளார்.

வடமராட்சி கொற்றாவத்தையைச் சேர்ந்த 33 வயதுடைய நமரே உயிரிழந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

கடந்த சனிக்கிழமை குறித்த நபர் வீட்டில் தனக்கு தானே உடலில்  பெற்றோல் ஊற்றி தீ மூட்டிக்கொண்டார்.  அதனை தொடர்ந்து அவரது மனைவியும் அயலவர்களும் தீயை அணைத்து மந்திகை வைத்தியசாலையில் அனுமதித்தனர்.

பின்னர் அங்கிருந்து மேலதிக சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

அங்கு சிகிச்சை பெற்று நிலையில், நேற்றையதினம் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

No comments