சிறப்பு நடவடிக்கை கட்டளை அதிகாரியாக மேஜர் ஜெனரல் சத்தியபிரிய லியனகே நியமனம்!

சிறீலங்காவில் சிறப்பு நடவடிக்கைகளுக்கான ஆணையகத்தின் கட்டளையிடும் அதிகாரியாக மேஜர் ஜெனரல் சத்தியபிரிய லியனகே நியமிக்கப்பட்டுள்ளார்.

மேல்மாகாணம் மற்றும் புத்தளம் மாவட்டம் என்பவற்றின் இராணுவ, கடற்படை, வான்படை மற்றும் காவற்துறை ஆகியவற்றின் கட்டுப்பாட்டு பிரதேசங்கள் அனைத்தும், இந்த விசேட நடவடிக்கைகளுக்கான ஆணையகத்தின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளன.

சுற்றிவளைப்புகளை மேற்கொள்ளல் உள்ளிட்ட பயங்கரவாத்துக்கு எதிரான நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்காக இந்த ஆணையகம் உருவாக்கப்பட்டுள்ளது. இதற்கான கட்டளையிடும் அதிகாரம் கொண்ட பிரதம அதிகாரியாகர் ஜெனரல் சத்தியபிரிய லியனகே அவர் நியமிக்கப்பட்டுள்ளார்.

No comments